Thursday, June 2, 2011

இனியாவது கரண்ட் கிடைக்குமா?

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையில்லா தமிழகம்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல்: இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திண்டுக்கலில் மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் காற்றாலை உற்பத்தியின் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது. இந்த மின்சாரம் காற்றின் அளவை பொறுத்து அதிகரிக்கும். இந்த மின்சாரத்தை ஒரு யூனிட் 3.39 ரூபாய்க்கு வாங்குகிறோம்.

கடந்த ஆட்சியில் மின்துறையில் உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை. இதனால் மின்சாரத்தை சீராக தர முடியவில்லை. தற்போது உள் கட்டமைப்பு வசதிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சோலார் மின் உற்பத்தி திட்டம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதில் சோலார் மின்உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டமும் அரசின் கைவசம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment